இன்னு நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அரசின் அறிவிப்பை தொடந்து எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவருமான சஜித் பிரமதாஸ தனது முகப்புத்தகத்தில் இவ்வாறான ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
“ஒக்டேன் 92 ரக பெற்றோல் 20/= ஆகவும், ஒக்டேன் 95 பெற்றோல் 23/= ஆகவும், ஒட்டோ டீசல் 7/= ஆகவும், சுப்பர் டீசல் 12/= ஆகவும்,மண்ணென்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 7/= ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொஹொட்டுவ அரசாங்கமே வெட்கமாக இருக்கிறது.நீங்கள் ஒரு தேசிய அவமானம்.உங்களால் நிர்வகிக்க முடியாவிட்டால் முடியாது என்று கூறுங்கள். ஐக்கிய மக்கள் சக்தி செழிப்பான மற்றும் அபிவிருத்தியின் சகாப்தத்தை உருவாக்கும்.” என பதிவிட்டுள்ளார்.