Date:

ஓய்வூதிய கொடுப்பனவு; விஷேட போக்குவரத்து வசதி

ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்காக ஜூன் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் முப்படையினரால் விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மாவட்ட / பிரதேச செயலகங்கள் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர்களின் வேண்டுகோளிற்கமைய அந்தந்த பகுதிகளில் உள்ள இராணுவ அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கமைய முப்படையினரால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஓய்வூதியம் பெற்றுக் கொள்வோர் இந்த போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்ள தத்தமது கிராம சேவை அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டும் நாடு முழுவதும் முடக்கப்பட்டிருந்த வேளையில் சுமார் 5 இலட்சத்துக்கு மேற்பட்ட வயோதிபர்கள் தமது ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள முப்படையினர் இவ்வாறு போக்குவரத்து வசதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய 18 மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். அவர்களுக்கான...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் விடுதலை

பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி(லிப்ட்) பராமரிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து முன்னாள்...

506 BYD வாகனங்கள் விடுவிப்பு

கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 506 BYD மின்சார வாகனங்கள் சுங்கத்...

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியில் இளைஞனைக் குறிவைத்து துப்பாக்கிப் பிரயோகம்

மாளிகாவத்தை ஜூம்மா மஸ்ஜித் வீதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக...