போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளம் தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குடு அஞ்சு என்ற போதைப்பொருள் விற்பனையாளரின் சகோதரனின் மகன் மற்றும் அவரது மனைவி ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 5 கிராம் ஐஸ் போதைப்பொருள் 14 இலட்சம ரூபாய், பணத்தை எண்ணும் இரண்டு இயந்திரங்கள் மற்றும் நான்கு அலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.