Date:

சந்தேக நபர்  உயிரிழப்பு: பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரின் வாகனத்திலிருந்து வெளியில் பாய்ந்த சந்தேக நபர்  உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை பகுதியில் இந்த சம்பவம் நேற்று (06) இடம்பெற்ற நிலையில், சம்பவம் தொடர்பில் இருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபரை கைது செய்த உப பொலிஸ் அதிகாரியும் பொலிஸ் பரிசோதகரும் இவ்வாறு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று(07) தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாட்டினை மீறிய குற்றச்சாட்டில் 48 வயதான குறித்த சந்தேக நபர் நேற்று (06) கைது செய்யப்பட்டு பொலிஸாரின் வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளார்.

இதன்போது, குறித்த நபர் பொலிஸாரின் வாகனத்தில் இருந்து வெளியே பாய்ந்தபோது கடும் காயங்களுக்குள்ளான நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் நேற்று மாலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில்...

கடலில் மிதந்து வந்த கொக்கேன் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிப்பு?

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக...

மின்சார கட்டணத்தில் மாற்றமில்லை

இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம்...

அரச இணையவழிச் சேவைகளை மீட்டெடுக்க விசேட கூட்டம்

சுமார் 8 திணைக்களங்களைப் பாதித்துள்ள அரச இணையவழிச் சேவைகளை மீட்டெடுப்பதை விரைவுபடுத்த,...