புதிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் சிலவற்றின் நிர்மாணப் பணிகளைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச இவற்றை டிஜிட்டல் முறையில் ஆரம்பித்து வைத்துள்ளார்.
கொகுவளை சந்தி, கெட்டம்பே சந்தி, கொம்பனித்தெரு அக்பர் மாவத்தை, பலதக்ஸ் மாவத்தை முதல் செத்தம் மாவத்தை வரையிலான வீதிகள் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டன.
புதிய களினி பாலம் முதல் அதுருகிரியா வரையான நான்கு வழிச் சாலைகள் கொண்ட அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் இதில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
இதன் நீளம்16.4 கி.மீ மற்றும் மதிப்பிடப்பட்ட செலவு ரூ.134.9 பில்லியன்.இந்த கட்டுமானத்தை சீனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனம் 36 மாதங்களில் மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.