நாடளாவியரீதியில் கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளவேளையில் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவதற்கு அனுமதித்துள்ளமை குறித்து எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
அறிக்கையொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் .
அரசாங்கம் சுற்றுலாப்பயணிகள் யால தேசிய பூங்காசெல்ல அனுமதிப்பது குறித்து ஆராய்ந்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் தங்கள் எல்லையை மூடியிருந்தவேளை- கொரோனா பெருந்தொற்றின் ஆரம்பகாலங்களில் அரசாங்கம் விளம்பரம் செய்து சுற்றுலாப்பயணிகளுடன் கொரோனா வைரசினை கொண்டுவந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் உக்ரைன் சுற்றுலாப்பயணிகளை அனுமதித்தது தனிமைப்படுத்தல் விதிமுறைகைள புறக்கணித்தது எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களை விட வெளிநாட்டவர்களை கொண்டுவருவதற்கு அரசாங்கம் ஏன் முன்னுரிமை வழங்குகின்றது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.