Date:

வைத்தியசாலையில் இருந்து வௌியேறினார் முஜிபுர் ரஹ்மான்

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த ​கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தற்போது சுகம்பெற்று வைத்தியசாலையில் இருந்து வௌியேறி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நான் தற்போது சுகம்பெற்று வைத்தியசாலையில் இருந்து வௌியேறி வீட்டில் தனமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.  என அவரின் உத்தியோகபூர்வ இன்றைய தினம் (6) தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.
அவரின் முகப்புத்தக்கத்தில் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“அல்ஹம்துலில்லாஹ்.. அல்லாஹ்வின் அருளால் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நான் தற்போது சுகம்பெற்று வைத்தியசாலையில் இருந்து வௌியேறி வீட்டில் தனமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வில் இருக்குமாறு வைத்தியர்கள் பரிந்துரை செய்துள்ளனர். நான் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நாட்களில் என்னுடைய சுகத்திற்காக பிரார்த்தனை செய்து, நலம் விசாரித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இந்நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
குறிப்பாக நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமாகிய சஜித் பிரேமதாஸ அவர்கள், தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களில் அடிக்கடி என்னுடன் தொடர்புகொண்டு நலம் விசாரித்துக் கொண்டே இருந்தார். அதேபோல் தன்னுடைய நலம் விசாரித்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தநேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்துடன், இந்த நேரத்தில் வைத்தியர் உபுல் திசாநாயக்க அவர்களையும், அவரது பணிக்குழாமையும் நன்றியோடு ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நாட்களிலும் சரி தற்போதும் சரி எனக்கு தேவையான அனைத்து உதவிகளையும், சிகிச்சைகளையும் மிகுந்த அக்கறையுடன் வழங்கினார்.
முக்கியமாக என்னொடு நெருங்கிப் பழகக்கூடிய பலரும், ஏனைய நலன் விரும்பிகள் உட்பட, நான் விரைவில் சுகம் பெற வேண்டி பிராரத்தனை செய்து, அடிக்கடி என்னை தொடர்பு கொண்டு சுகம் விசாரித்த அனைவருக்கும் இந்நேரத்தில் நான் மகத்தான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...