Date:

வைத்தியசாலையில் இருந்து வௌியேறினார் முஜிபுர் ரஹ்மான்

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த ​கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தற்போது சுகம்பெற்று வைத்தியசாலையில் இருந்து வௌியேறி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நான் தற்போது சுகம்பெற்று வைத்தியசாலையில் இருந்து வௌியேறி வீட்டில் தனமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.  என அவரின் உத்தியோகபூர்வ இன்றைய தினம் (6) தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.
அவரின் முகப்புத்தக்கத்தில் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“அல்ஹம்துலில்லாஹ்.. அல்லாஹ்வின் அருளால் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நான் தற்போது சுகம்பெற்று வைத்தியசாலையில் இருந்து வௌியேறி வீட்டில் தனமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வில் இருக்குமாறு வைத்தியர்கள் பரிந்துரை செய்துள்ளனர். நான் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நாட்களில் என்னுடைய சுகத்திற்காக பிரார்த்தனை செய்து, நலம் விசாரித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இந்நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
குறிப்பாக நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமாகிய சஜித் பிரேமதாஸ அவர்கள், தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களில் அடிக்கடி என்னுடன் தொடர்புகொண்டு நலம் விசாரித்துக் கொண்டே இருந்தார். அதேபோல் தன்னுடைய நலம் விசாரித்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தநேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்துடன், இந்த நேரத்தில் வைத்தியர் உபுல் திசாநாயக்க அவர்களையும், அவரது பணிக்குழாமையும் நன்றியோடு ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நாட்களிலும் சரி தற்போதும் சரி எனக்கு தேவையான அனைத்து உதவிகளையும், சிகிச்சைகளையும் மிகுந்த அக்கறையுடன் வழங்கினார்.
முக்கியமாக என்னொடு நெருங்கிப் பழகக்கூடிய பலரும், ஏனைய நலன் விரும்பிகள் உட்பட, நான் விரைவில் சுகம் பெற வேண்டி பிராரத்தனை செய்து, அடிக்கடி என்னை தொடர்பு கொண்டு சுகம் விசாரித்த அனைவருக்கும் இந்நேரத்தில் நான் மகத்தான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவான புத்தளம்!

தேசிய விளையாட்டுப் போட்டியின் அங்கமாக நடைபெற்ற பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட...

‘Mask’ அணியுங்கள்.. | அறிவுறுத்தல் வெளியானது!

நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொவிட் வைரஸின் மாறுபாடு உருவாகும் போக்கு...

பலனின்றி கைவிடாத வேலை நிறுத்தம்!

வேலைநிறுத்தப் போராட்டத்தைத் ஆரம்பிக்கவுள்ளதாக நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமது...

துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில்

2017 முதல் 2019 வரை தேசிய லொத்தர் சபையின் நிர்வாக இயக்குநராகப்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373