Date:

மாவனெல்லயில் மண்ணுக்குள் புதையுண்ட  தனது எஜமான்களை காட்டிக்கொடுத்த நாய்

மாவனெல்ல தெவனகல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண் திட்டு சரிந்து விழுந்ததில், நால்வர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர்.

கடந்த சில நாள்களாக பெய்த அடைமழையின் காரணமாகவே இந்த மண்திட்டு சரிந்து வீட்டின் மீது விழுந்துள்ளது.

மண்ணுக்குள் தந்தை, தாய், மகன், மற்றுமொருவர் புதையுண்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தது.

அதனை தொடந்து மண்ணுக்குள் புதையுண்டிருப்பவர்களே தேடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை சம்பவம் நடந்த வீட்டில் இருந்த நாய் நிலச்சரிவு காரணமாக மண்ணால் மூடப்பட்ட இடத்திற்கு வந்துள்ளது, ஆனால் அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டியடித்தனர்.

இருப்பினும் நாய் தனது வீட்டிற்குத் திரும்பி அதன் முன் கால்களிலிருந்து மண்ணை அகற்றத் தொடங்கியபோது மீட்புப் பணியாளர்கள் கவனித்தனர்.

பின்னர் மீட்பு பணியாளர்கள் நாய் தனது கால்களினால் அகற்றிய இடத்தை தொண்டிய போது அங்கு
அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, நிலச்சரிவில் இறந்த ஒரே குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

புகைப்படம் – பிரதீப் குமார தர்மரத்ண

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட இரண்டாவது ஒருநாள் போட்டி

நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, கிறைஸ்ட்சர்சில் தொடர்ச்சியாக...

கேக் கொள்வனவு செய்வதை தவிருங்கள்! இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் வெதுப்பகங்களில் உற்பத்தி செய்யும் கேக் தொடர்பில் சிக்கல் நிலை தோற்றுவித்துள்ளது. இந்தியாவில்...

PUCSL தலைவர் பதவியில் இருந்து நீக்கம் – குற்றச்சாட்டை மறுக்கும் ஜனக

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் பதவியில் இருந்து தாம் நீக்கப்படுவதற்கு...

சீக்கிய தேசத்தின் கோரிக்கையை நியாயப்படுத்தும் அம்ரித்பால் -காலிஸ்தான் சர்ச்சையின் வரலாறு

அம்ரித்பால் மீது முன்னெப்போதும் இல்லாத அளவு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை அந்த சமூகத்தை...