Date:

மாவனெல்லயில் மண்ணுக்குள் புதையுண்ட  தனது எஜமான்களை காட்டிக்கொடுத்த நாய்

மாவனெல்ல தெவனகல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண் திட்டு சரிந்து விழுந்ததில், நால்வர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர்.

கடந்த சில நாள்களாக பெய்த அடைமழையின் காரணமாகவே இந்த மண்திட்டு சரிந்து வீட்டின் மீது விழுந்துள்ளது.

மண்ணுக்குள் தந்தை, தாய், மகன், மற்றுமொருவர் புதையுண்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தது.

அதனை தொடந்து மண்ணுக்குள் புதையுண்டிருப்பவர்களே தேடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை சம்பவம் நடந்த வீட்டில் இருந்த நாய் நிலச்சரிவு காரணமாக மண்ணால் மூடப்பட்ட இடத்திற்கு வந்துள்ளது, ஆனால் அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டியடித்தனர்.

இருப்பினும் நாய் தனது வீட்டிற்குத் திரும்பி அதன் முன் கால்களிலிருந்து மண்ணை அகற்றத் தொடங்கியபோது மீட்புப் பணியாளர்கள் கவனித்தனர்.

பின்னர் மீட்பு பணியாளர்கள் நாய் தனது கால்களினால் அகற்றிய இடத்தை தொண்டிய போது அங்கு
அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, நிலச்சரிவில் இறந்த ஒரே குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

புகைப்படம் – பிரதீப் குமார தர்மரத்ண

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அனர்த்தத்தில் பலியானோருக்கு இறப்புச் சான்றிதழ்

நாட்டை சூறையாடிய டிட்வா புயல், மண்சரிவு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் ...

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின்...

எரிவாயு விநியோகம் செய்வதில் சிக்கல்

கொழும்பு, பதுளை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 48 பகுதிகளுக்கு...

உயிரிழப்பு 474 ஆக அதிகரிப்பு

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த...