Date:

பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது குறித்த அறிவிப்பு

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது குறித்து எதிர்வரும் 6 ம் திகதி தீர்மானிக்கப்படும் என அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி ,நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமை குறித்து, தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி தலைமையில் நேற்று கூடிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடு காரணமாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடு தொடரும் பட்சத்தில், தற்போது கொவிட் தொற்றில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை மேலும் குறைக்க முடியும் என அதிகாரிகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

எதிர்வரும் 7ம் திகதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை, எதிர்வரும் 14 அல்லது 15ம் திகதி வரை நீடிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

எனினும்,எதிர்வரும் 6 ம் திகதி ஜனாதிபதி தலைமையில் கூடும் கொவிட் செயலணியின் கூட்டத்தில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி – தமிழன் நாளிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கைதான கிழக்குப் பல்கலை மாணவர்களுக்கு பிணை

மட்டக்களப்பு, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை...

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியலில் உத்தரவு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட...

பாடசாலைகளில் மாணவர்களை உள்வாங்கும் சுற்றறிக்கை இரத்து

இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைச் சுற்றறிக்கைகளை இரத்துச்செய்து, புதிய சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு கல்வி,...

துசித ஹல்லொலுவவின் பிணை மனு நிராகரிப்பு

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துசித ஹல்லொலுவ தாக்கல் செய்த பிணை மனுவை...