Date:

பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது குறித்த அறிவிப்பு

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது குறித்து எதிர்வரும் 6 ம் திகதி தீர்மானிக்கப்படும் என அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி ,நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமை குறித்து, தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி தலைமையில் நேற்று கூடிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடு காரணமாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடு தொடரும் பட்சத்தில், தற்போது கொவிட் தொற்றில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை மேலும் குறைக்க முடியும் என அதிகாரிகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

எதிர்வரும் 7ம் திகதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை, எதிர்வரும் 14 அல்லது 15ம் திகதி வரை நீடிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

எனினும்,எதிர்வரும் 6 ம் திகதி ஜனாதிபதி தலைமையில் கூடும் கொவிட் செயலணியின் கூட்டத்தில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி – தமிழன் நாளிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையில் பயங்கரம் – வாடகை வீட்டில் தங்கியிருந்த 71 வயதான நபர் வெட்டிக்கொலை !

  எம்பிலிபிட்டிய - மடுவன்வெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நபரொருவர்...

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட 726 பேர் கைது !

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களும் 10...

போர் பதற்றத்திலும் இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி – குவிக்கப்படும் இராணுவத்தினர் !

ஈரான் - இஸ்ரேலுக்கு இடையில் எந்த நேரத்திலும் மோதல் நிலைமை ஏற்படலாம்...

இலங்கையில் ஒன்றிணையும் Dialog – Airtel ! ஒப்பந்தம் கைச்சாத்து !

டயலொக் அக்ஸியாட்டா (Dialog Axiata) மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் (Bharti...