Date:

அனைத்து விமான நிலையங்களும் இன்று முதல் மீள திறப்பு

இலங்கையின் அனைத்து விமான நிலையங்களும் இன்று (01) முதல் மீள திறக்கப்பட்டன.

நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து, வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் 21ஆம் திகதி விதிக்கப்பட்ட இத் தடை உத்தரவு நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது. எனவே இன்று முதல் வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு  அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களையும் மீள திறக்க தீர்மானிக்கப்பட்டதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக்க தெரிவித்தார். எனினும் இலங்கை வரும் விமானமொன்றில் வரக்கூடிய ஆகக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை 75 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

எவ்வாறாயினும், கடந்த சில நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபாலி தர்மதாச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று (1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலையை...

புதுவருட நிகழ்வுகளுடன் பணிகளை ஆரம்பித்த இலங்கை விமானப்படையினர்.

2026 ஆம் ஆண்டு புதுவருட ஆரம்பத்தை முன்னிட்டு இலங்கை விமானப்படை தலைமையகத்தில்...

சொஹரா புஹாரிக்கு ஒரு வாரம் காலக்கெடு

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த...