Date:

அனைத்து விமான நிலையங்களும் இன்று முதல் மீள திறப்பு

இலங்கையின் அனைத்து விமான நிலையங்களும் இன்று (01) முதல் மீள திறக்கப்பட்டன.

நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து, வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் 21ஆம் திகதி விதிக்கப்பட்ட இத் தடை உத்தரவு நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது. எனவே இன்று முதல் வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு  அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களையும் மீள திறக்க தீர்மானிக்கப்பட்டதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக்க தெரிவித்தார். எனினும் இலங்கை வரும் விமானமொன்றில் வரக்கூடிய ஆகக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை 75 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

எவ்வாறாயினும், கடந்த சில நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபாலி தர்மதாச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

திரிய்யாவின் சிறுசுடர் முதல் தேசத்தின் மாண்பு வரை: சவூதி ஸ்தாபக தினத்தின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றுப் பாய்ச்சல்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) - ஓட்டமாவடி.   இன்று உலக அரங்கில் தனித்துவமான அடையாளத்துடன்...

ஜோன்ஸ்டன் உள்ளிட்டோர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச்...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று பிற்பகல்...

டி20 உலகக் கிண்ணத்தால் களைகட்டும் கொழும்பு: சுற்றுலாத்துறையில் புதிய சாதனை

2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்...