தேசிய விளையாட்டுப் போட்டியின் அங்கமாக நடைபெற்ற பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட தொடரில் புத்தளம் பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.
புத்தளம் மாவட்டம் மாராவில புனித செபஸ்டியன் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 06 பிரதேச செயலக அணிகள் பங்கேற்ற நிலையில் இறுதிப் போட்டியில் வென்னப்புவ பிரதேச செயலக அணியை புத்தளம் அணி 03 கோல்களால் வெற்றியீட்டியது.
இதன்மூலம் புத்தளம் அணி மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.