Date:

உப்பு இறக்குமதி தொடர்பில் மற்றுமொரு மகிழ்ச்சியான கட்டம்…!

உப்பு இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை உப்பை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் உபுல்மலீ பிரேமதிலக்க தெரிவித்துள்ளார்.

எனவே உப்பு இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் தேவையில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் அனுமதிப் பெற்ற எந்தவொரு இறக்கமதியாளரும் உப்பை இறக்குமதி செய்ய முடியும் என உபுல்மலீ பிரேமதிலக்க தெரிவித்தார்.

அத்துடன் அயடீன் கலக்காத மற்றும் தூள் உப்பை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, உணவுக்கு பயன்படுத்தப்படும் 250 மெற்றிக் தொன் தூள் உப்பு இன்று செவ்வாய்க்கிழமை (20) நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக வரத்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

ஜூன் மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட...

22 மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் இதோ!

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற உள்ளுராட்சி...

புதிய கொவிட்-19 மாறுபாடு; பொதுமக்கள் முடிந்தவரை சுகாதார பாதுகாப்பு…

NB 1.8.1 என அழைக்கப்படும் புதிய கொவிட்-19 மாறுபாடு, உலகளாவிய அளவில்...

தடம்புரண்ட இரவு தபால் ரயில்..| போக்குவரத்து பாதிப்பு!

கலபொட ரயில் நிலையம் அருகே ரயிலொன்று தடம்புரண்டதால் , மலையக ரயில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373