விழுந்துள்ள இரசாயனம் உள்ளிட்டப் பொருள்கள் கொழும்பு கடற்பரப்பின்
வடக்கு பக்கமாகவே கரையொதுங்கின எனத் தெரிவித்த நாரா அமைப்பின்
சிரேஷ்ட ஆய்வாளர் பேராசிரியர் தீப்த அமரதுங்க. எனினும், அவ்வாறான
பொருள்கள் யாவும் தெற்கு பக்கமாகவே கரையொதுங்கி வருகின்றன என்றார்.
பாணந்துறை வரையிலான கடற்கரையோரங்களில், ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டிருந்தன. தற்போது காலி கடற்கரையோரங்கள் வரை
ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்த அவர், முன்னேற்பாடு
நடவடிக்கையாக, பாணந்துறையிலிருந்து நீர்கொழும்பு வரையிலான
கடற்பிரதேசங்களில், கடற்றொழில்களில் ஈடுபடுவதற்கு முற்றிலும் தடை
விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
எனினும் தற்போது மீன் சந்தைகளில் காணப்படும் மீன்கள், மேற்குறித்தப்
பிரதேசங்களில் இருந்துப் பிடிக்கப்பட்டவைகள் அல்ல என்பதை உறுதியாகக் கூற
முடியுமெனவும், மீன் சந்தைகளிலிருக்கும் மீன்கள், வடக்கு, கிழக்கு கடற்
பிரதேசங்களில் பிடிக்கப்பட்டவையாகும்.