Date:

திசைமாறிய கப்பல் கழிவுகள்

தீப்பற்றியெறிந்த “எம்.வீ. எக்ஸ் பிரஸ் பேர்ல்” எனும் கப்பலிலிருந்து கடலுக்குள்
விழுந்துள்ள இரசாயனம் உள்ளிட்டப் பொருள்கள் கொழும்பு கடற்பரப்பின்
வடக்கு பக்கமாகவே கரையொதுங்கின எனத் தெரிவித்த நாரா அமைப்பின்
சிரேஷ்ட ஆய்வாளர் பேராசிரியர் தீப்த அமரதுங்க. எனினும், அவ்வாறான
பொருள்கள் யாவும் தெற்கு பக்கமாகவே கரையொதுங்கி வருகின்றன என்றார்.

பாணந்துறை வரையிலான கடற்கரையோரங்களில், ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டிருந்தன. தற்போது காலி கடற்கரை​யோரங்கள் வரை
ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்த அவர், முன்னேற்பாடு
நடவடிக்கையாக, பாணந்துறையிலிருந்து நீர்கொழும்பு வரையிலான
கடற்பிரதேசங்களில், கடற்றொழில்களில் ஈடுபடுவதற்கு முற்றிலும் தடை
விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

எனினும் தற்போது மீன் சந்தைகளில் காணப்படும் மீன்கள், மேற்குறித்தப்
பிரதேசங்களில் இருந்துப் பிடிக்கப்பட்டவைகள் அல்ல என்பதை உறுதியாகக் கூற
மு​டியுமெனவும், மீன் சந்தைகளிலிருக்கும் மீன்கள், வடக்கு, கிழக்கு கடற்
பிரதேசங்களில் பிடிக்கப்பட்டவையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபை மறுசீரமைப்பு மேலும் தாமதம்!

தேசிய மின்சக்தி கொள்கை இம்முறையும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (23)...

யாழ். சர்வதேச கிரிக்கெட் அரங்கின் கட்டுமானம் இடைநிறுத்தப்பட்டது

வட மாகாணத்தின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் அரங்கின் கட்டுமானப் பணியானது தற்காலிகமாக...

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு ஆபத்து

இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரியை நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில்...

கொழும்பு மாநகரசபை ஊழல்: பொதுமக்களிடம் உதவி கோரல்

2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர...