Date:

திசைமாறிய கப்பல் கழிவுகள்

தீப்பற்றியெறிந்த “எம்.வீ. எக்ஸ் பிரஸ் பேர்ல்” எனும் கப்பலிலிருந்து கடலுக்குள்
விழுந்துள்ள இரசாயனம் உள்ளிட்டப் பொருள்கள் கொழும்பு கடற்பரப்பின்
வடக்கு பக்கமாகவே கரையொதுங்கின எனத் தெரிவித்த நாரா அமைப்பின்
சிரேஷ்ட ஆய்வாளர் பேராசிரியர் தீப்த அமரதுங்க. எனினும், அவ்வாறான
பொருள்கள் யாவும் தெற்கு பக்கமாகவே கரையொதுங்கி வருகின்றன என்றார்.

பாணந்துறை வரையிலான கடற்கரையோரங்களில், ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டிருந்தன. தற்போது காலி கடற்கரை​யோரங்கள் வரை
ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்த அவர், முன்னேற்பாடு
நடவடிக்கையாக, பாணந்துறையிலிருந்து நீர்கொழும்பு வரையிலான
கடற்பிரதேசங்களில், கடற்றொழில்களில் ஈடுபடுவதற்கு முற்றிலும் தடை
விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

எனினும் தற்போது மீன் சந்தைகளில் காணப்படும் மீன்கள், மேற்குறித்தப்
பிரதேசங்களில் இருந்துப் பிடிக்கப்பட்டவைகள் அல்ல என்பதை உறுதியாகக் கூற
மு​டியுமெனவும், மீன் சந்தைகளிலிருக்கும் மீன்கள், வடக்கு, கிழக்கு கடற்
பிரதேசங்களில் பிடிக்கப்பட்டவையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு முன்பள்ளி ஆசிரியர்களின் வேதனம் அதிகரிப்பு

கொழும்பு மாநகர சபையினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் மாதாந்த வேதனத்தை...

இலங்கை இளையோர் அணி அசத்தல் வெற்றி

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்றில்,...

80 உயிர்களை நூலிழையில் காப்பாற்றிய தலவாக்கலை பஸ் சாரதி

தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடவத்த இலங்கை போக்குவரத்து சபை...

இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க...