நாட்டின் எரிப்பொருள் சுத்திகரிப்பு, விநியோகம் ஆகியவற்றை தனியார் நிறுவனங்களுக்கும்
திறந்துவிடுவதற்கு அரசாங்கம் தனது கவனத்தை செலுத்தியுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெற்றோலியக் கூட்டுத்தானத்தினால் தற்போது முன்னெடுக்கப்படும் மேற்படி செயற்பாடுகள், பெற்றோலியக் கூட்டுத்தாபன சட்டம் திருத்தப்பட்டதன் பின்னர், அவற்றை
தனியார் துறையினரும் முன்னெடுப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
அதனால், சட்டத்தை திருத்துவதற்கான யோசனை, விடயதானதுக்குப் பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பிலவினால், அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய்களை உற்பத்திச் செய்தல், மாற்று எரிபொருள் நிலையங்களை நிறுவுதல், சுத்திகரித்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியனவற்றுக்கு அனுமதியளிக்கப்படும்
என்றும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.