Date:

தனியார் வசமாகவுள்ள பெற்றோலியக் கூட்டுத்தானம்?

நாட்டின் எரிப்பொருள் சுத்திகரிப்பு, விநியோகம் ஆகியவற்றை தனியார் நிறுவனங்களுக்கும்
திறந்துவிடுவதற்கு அரசாங்கம் தனது கவனத்தை செலுத்தியுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெற்றோலியக் கூட்டுத்தானத்தினால் தற்போது முன்னெடுக்கப்படும் ​மேற்படி செயற்பாடுகள், பெற்றோலியக் கூட்டுத்தாபன சட்டம் திருத்தப்பட்டதன் பின்னர், அவற்றை
தனியார் துறையினரும் முன்னெடுப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

அதனால், சட்டத்தை திருத்துவதற்கான யோசனை, விடயதானதுக்குப் ​பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பிலவினால், அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய்களை உற்பத்திச் செய்தல், மாற்று எரிபொருள் நிலையங்களை நிறுவுதல், சுத்திகரித்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியனவற்றுக்கு அனுமதியளிக்கப்படும்
என்றும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தாழிறங்கும் பிரதான வீதி | போக்குவரத்துத் தடங்கல்..!

பசறையிலிருந்து மடுல்சீமைக்கு செல்கின்ற பிரதான வீதியில் இரண்டாம் கட்டை பகுதியில் ஏற்பட்டுள்ள...

கடவத்தை ஊடாக கொழும்பு – கண்டி வீதியைப் பயன்படுத்துவோருக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!

கட்டுமானப் பணிகள் காரணமாக கொழும்பு - கண்டி வீதியின் கடவத்தை பகுதியில்...

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளையே இலங்கையை…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்,...

கண்டி வீதியில் இரண்டு பேருந்துகளும் லொறி ஒன்றும் மோதி இடம்பெற்ற பாரிய விபத்து..!

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பல்பாத பகுதியில் இன்று (09)...