Date:

2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் அணி அறிவிப்பு; அணித்தலைவரான அசலங்க!

 

2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த ஆடவர் ஒருநாள் கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இலங்கை அணியின் சரித் அசலங்க அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

கடந்த 2024 ஆம் ஆண்டில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஜொலித்த 11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்து ஐசிசி சிறந்த கனவு அணியாக அறிவித்துள்ளது.

 

மேலும், இலங்கை அணியின் நான்கு வீரர்கள் இந்த அணியில் இடம்பிடித்துள்ளமை விசேடம்சமாகும்.

 

அதன்படி, பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெந்திஸ், சரித் அசலங்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

 

அதேபோல், அணியில் சைம் அயூப் (பாகிஸ்தான்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்), ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் (மேற்கிந்திய தீவுகள்), அஸ்மத்துல்லா ஓமர்சாய் (ஆப்கானிஸ்தான்), ஷாஹீன் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்), ஹரிஸ் ரவுஃப் (பாகிஸ்தான்) மற்றும் ஏஎம் கசன்ஃபர் (ஆப்கானிஸ்தான்) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொலைபேசி அழைப்பு மற்றும் இணைய வரி

கைப்பேசி பயனர்கள் இணையச் சேவைகளுக்கு 20.3% வரியும், வழக்கமான குரல் அழைப்புகளுக்கு...

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் கன மழையைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மண்சரிவு...

350 மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை

பல மருந்து வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வர்த்தமானி...

பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை அனுமதி

பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக...