Date:

சம்பள பேச்சு வார்த்தையை புறக்கணித்த முதலாளிமார் சம்மேளனம்

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பிலான கலந்துரையாடல் இன்று தொழில் அமைச்சில் இடம்பெற்ற நிலையில் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள் பிரசன்னமாகவில்லையெனக் கூறப்படுகிறது.

 

 

இந்த கலந்துரையாடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ், தொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிந்த போதிலும், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள் பிரசன்னமாகவில்லை.

 

 

முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள் இன்றைய கலந்துரையாடலுக்கு பிரசன்னமாகாமை தொடர்பில், நீதிமன்றத்திற்கு விடயங்கள் தெளிவூட்டப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்..

 

 

 

தொழிலாளர்களின் சம்பளத்தை அரசாங்கம் நிர்ணயித்து வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளமையினால், அதனை நிறுவனங்களுக்கு மீற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

 

 

 

நிறுவனங்கள் வர்த்தமானி அறிவித்தலை மீறி செயற்படுகின்றமை மற்றும் கலந்துரையாடலுக்கு பிரசன்னமாகாமை குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என அவர் தெரிவிக்கின்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்துவதற்கு நடவடிக்கை

இலங்கை போக்குவரத்து சபையின் மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்துவதற்கு விரைவாக...

ஈரான் -இஸ்ரேலில் தொடரும் யுத்த: கல்முனையில் எரிபொருள் ‘கியூ’

ஈரான் -இஸ்ரேலில் தொடரும் யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற...

ஈரான் – இஸ்ரேல் மோதலில் நான்கு இலங்கையர்கள் காயம்

இஸ்ரேல் மீது ஈரான் தொடுத்துள்ள தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலில்...

தாக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை பெண் உறுப்பினர் வைத்தியசாலையில்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைத்...