பேராதனை மற்றும் கெலிஓயா ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் இன்று வியாழக்கிழமை (30) காலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
இதன் காரணமாக மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இதன் காரணமாக கொழும்பு கோட்டை – பதுளைக்கு இடையிலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.