Date:

குர்ஆனை எரித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர் சடலமாக நிலையில் மீட்பு!

புனித குர்ஆனை பலமுறை எரித்த ஈராக்கிய நாத்திகரான சல்வான் மோமிகா நோர்வேயில் இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பல பிரபல்யமான செய்தி தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நபர் பலமுறை இஸ்லாத்துக்கு எதிராக குர்ஆனை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு சர்சையில் சிக்கிய நபர் ஆவார். இவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படும் செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இவர் பலமுறை சுவீடனில் அகதி அந்தஸ்து கோரிய போதிலும் சுவீடன் இவரது அகதித் தஞ்சக் கோரிக்கையை நிராகரித்து அவரை நாடு கடத்த தயாராக இருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

2023ஆம் ஆண்டு ஜுன் மாதம் 28ஆம் திகதி புதன் கிழமை சுவீ­டனின் ஸ்டொக் ஹோம் நகரில், அதுவும் பள்­ளி­வா­ச­லொன்­றுக்கு முன்னால் இந்த அவ­ம­திப்பு அரங்­கேற்­றப்­பட்­டி­ருக்­கி­றது.

சுவீடன் பொலி­ஸாரின் அனு­மதி பெற்று நடத்­தப்­பட்ட எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்­தின்­போது உலக முஸ்­லிம்­களை கொதித்தெழச் செய்யும் வண்ணம் அந்தக் கூட்டத்தில் இருந்த இருவர் குர்ஆன் பக்கங்களை கிழித்து, அதை கொண்டு தங்களது காலணிகளை துடைத்தனர். பின்னர் அதனை தீயிட்டு கொளுத்தினர்.

குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 37 வயதான வாலிபர் ஒருவரை சுவீடன் பொலிஸார் கைது செய்தனர். சல்வான் மோமிகா என்ற அந்த நபர், பல ஆண்டுகளுக்கு முன் ஈராக்கில் இருந்து தப்பித்து சுவீடனுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளுக்கு வாகன அனுமதி

ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள், மாகாண அரச அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு...

கிராம சேவகர்கள் சுகயீன விடுமுறையில்

பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவகர்கள் நாடளாவிய ரீதியில் கடமைகளில் இருந்து...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை...

2022 சாதாரண தர பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள் வெளியானது

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள்...