Date:

முல்லைத்தீவில் குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பித்து வைப்பு !

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் தேசிய நீர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் சமூக நல செயற்றிட்டமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் நேற்றையதினம்(28) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் விநியோகக் குழாயினை கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான், மக்கள் பாவனைக்காக திறந்து வைத்ததுடன் புதிய நீர் விநியோகக் குழாய் பதிப்பு நிர்மாண வேலையையும் இராஜாங்க அமைச்சர் இதன்போது ஆரம்பித்து வைத்தார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாவமைப்புச் சபையின் வடக்கு/வடமத்திய மாகாண மேலதிக பொது முகாமையாளர் தி.பாரதிதாசனின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் மணிவண்ணன் உமாமகள் , கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஜெயக்குமார் ராசஜோகினி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...