வடமேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(24) நடைபெற்ற ஜனாதிபதித் தோ்தலில் அதிகம் அறியப்படாத 44 வயது எதிா்க்கட்சித் தலைவா் பாஸ்சிரோ டியோமயே ஃபே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாா்.
பொய்களை பரப்பியது, நீதிமன்ற அவமதிப்பு, அரசின் மீது அவதூறு பரப்பியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா், விடுவிக்கப்பட்ட 2 வாரங்களுக்குள் தோ்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.