Date:

குழந்தைகளுக்கு ஊசி மூலம் கோழி இரத்தம்

தங்கள் குழந்தைகளை எதிர்காலத்தில் அதிக திறன்படைத்தவர்களாக மாற்றுவதற்காக, கோழியின் இரத்தத்தை ஊசி மூலம் உடலில் செலுத்தும் ‘சிக்கன் பேரண்டிங்’ எனப்படும் வினோத வளர்ப்பு முறை சீன பெற்றோர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு பெற்றோருக்குமே தங்களது பிள்ளைகள் புத்திசாலிகளாக, வாழ்க்கையில் வெற்றியாளர்களாக வலம் வர வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அவர்களின் எதிர்காலத்திற்காக தங்களது நிகழ்காலத்தை அடகு வைக்க தயங்கவே மாட்டார்கள்.

சிலர் தங்களது குழந்தைகளுக்கு அறிவுச் செல்வத்தை சேமித்து தரும் செயல்களை மேற்கொள்வார்கள். ஆனால், வேறு சிலரோ குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வினோதமான செயல்களைச் செய்வார்கள். தற்போது சீனாவிலும் அது போல் தான், சிக்கன் பேரண்டிங் (chicken parenting) எனப்படும் வினோதப் பழக்கம் ஒன்று பிரபலமாகி வருகிறது.

ஊசி மூலம் ரத்தம்

கேட்பதற்கே வித்தியாசமாக இருக்கும் இந்த சிக்கன் பேரண்டிங் முறையில், பெற்றோர் / பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கோழியின் இரத்தத்தை ஊசியை செலுத்துகிறார்கள். இது எதிர்காலத்தில் அக்குழந்தைகள் அதிக புத்திசாலிகளாக இருப்பதற்கும், கருவுறாமை, புற்றுநோய் மற்றும் வழுக்கை உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கும் மருந்தாக இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குண்டுப்புரளி…

கத்தார் நாட்டின் தோஹாவிலிருந்து வந்த விமானத்தில் பயணிகளாக மாறுவேடமிட்ட நான்கு பேர்...

2026 இல் உள்ள அரச விடுமுறைகள் இதோ…

2026 ஆம் ஆண்டு ஆரம்பமாவதற்கு இன்னும் 03 நாட்களே உள்ளன. புதிய ஆண்டிற்கான...

பழம்பெரும் பாடகி லதா வல்பொல காலமானார்

சிங்களத் திரையிசையின் 'குயில் என அறியப்படும் லதா வல்பொல இன்று (15)...

ஆயுதங்களுடன் ஜிங்கா கைது!

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவருமான 'ஹீனட்டியன...