Date:

Breaking : தடுப்பூசி போடாதவர்களுக்கு இந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாது

நாட்டில் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை எனில் இரு இடங்களுக்குள் பிரவேசிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இவ்வாறு கொவிட்  தடுப்பூசி செலுத்தாதவர்கள் பண்டாரவளை மற்றும் மன்னார் நகரங்களுக்குள் செல்ல இனி அனுமதி இல்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொவிட் தொற்று தடுப்பு தொடர்பான அந்தந்த மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, கோவிட் தடுப்பூசி அட்டை இல்லாமல் குறித்த இரு நகரங்களுக்குள் நுழைய முயன்ற 30 வயதிற்கு மேற்பட்ட நபர்களை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.

மேலும், இவ்வாறானவர்கள் குறித்த இரு நகரங்களுக்குள்ளும் நுழைவதைத் தடுக்கும் பொருட்டு பண்டாரவளை மற்றும் மன்னாரின் நுழைவு இடங்களில் பாதைத் தடைகள் செயல்படும் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

8 பேருக்கு மரண தண்டனை விதித்தது களுத்துறை மேல் நீதிமன்றம்

களுத்துறை மேல் நீதிமன்றம் 8 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 2003...

மாணவர்கள் படுகொலை: மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர் ( காணொளி)

மணிப்பூர் மாநிலத்தில் 'மைத்தேயி' இனக்குழு மாணவர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால்...

ஏழு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு உயர் அபாய நிலை...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நான்கு பெண்கள் அதிரடிக் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 கோடி...