Date:

மதுபோதையில் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சர்

இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது நண்பர்களுடன்மதுபோதையில் , வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைந்து சிறை மற்றும் தூக்கு மேடைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இச்சம்பவத்தின் போது இராஜாங்க அமைச்சர் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாகவும், நடக்க முடியாத நிலையில் இருந்த அவரது நண்பர்கள் சிலரை சிறைக்குள் செல்ல அனுமதி மறுத்த சிறை அதிகாரிகளை அவர்கள் தவறாக பேசியதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிரேஷ்ட சிறை அதிகாரியொருவர் இச்சம்பவம் நடந்ததை உறுதிசெய்தாலும், மேலதிக தகவல்களை வெளியிட முடியாது என்றும் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை முகாமையாளர் மற்றும் சிறை மறுவாழ்வு அமைச்சின் செய்தித் தொடர்பாளரை தொடர்பு கொண்டபோது, ​​ இராஜாங்க அமைச்சர் லோஹன் ரத்வத்தே சம்பந்தப்பட்டதில் எந்த உண்மையும் இல்லை என்றும் சம்பவத்தின் போது அங்கு அவர் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“ஹரக் கட்டா” கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

பூஸா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாளகுழுவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான “ஹரக் கட்டா”...

நேபாளத்தில் புதியவகை கொரோன தோற்றால் 35 பேர் பாதிப்பு!

நேபாள நாட்டில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்றால், 7...

செம்மணி மனித புதைகுழி விடயத்தில் அழுத்தம் கொடுப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது!

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன்...

ராகம, கந்தானை உள்ளிட்ட பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கை!

ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று (04) இரவு இராணுவம்...