பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 200 வீடுகளை நிர்மாணிப்பதற்கான யோசனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுத் திட்ட அமைச்சர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்ட யோசனையில் வியத்புர வீட்டுத்திட்டத் திலிருந்து வீடுகளை வழங்குவதுடன் மாதிவெல பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் குடியிருப்புகளில் மேலும் 200 வீடுகளை நிர்மாணிக்கத் தீர்மானித்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.