நுவரெலியா மாவட்டத்தில் கொவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், நுவரெலியா மாவட்டத்திலுள்ள 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (11) ஆரம்பமானது.
சீன தயாரிப்பான சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது அளவு இன்று முதல் இளைஞர் யுவதிகளுக்கு செலுத்தப்படுகின்றது.
பாடசாலைகளிலும், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.