பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் போதுமான அளவு நெல்லை சந்தைக்கு விநியோகிக்காமையினால் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை அதிகரிக்கப்பட்டதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு அரிசியை சந்தைக்கு விநியோகிப்பதாக உறுதியளித்திருந்த நெல் ஆலை உரியைமயாளர்கள் அதனை நிறைவேற்ற தவறியுள்ளனர்.
இந்தநிலையில், அரசாங்கம் தவறான பொருளாதார முகாமைத்துவத் கொள்கைகளை கடைப்பிடிப்பதாக சில தரப்பினர் பிழையாக அர்த்தப்படுத்திக் கொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.