எவரேனும் ஒருவர் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதை கட்டாயமாக்க முடியாது. அவ்வாறு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை கட்டுப்படுத்த மட்டுமே முடியும்.
அதேவேளை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் உள்நாட்டு மருத்துவத்தையும் மேற்கத்தைய மருத்துவத்தையும் இணைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தின தேரர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் சுகாதார அமைச்சரிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.