கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளை சேர்ந்த 20 முதல் 30 வயதானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மாநகரசபையின் வைத்தியர் தினூக குருகே தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாளை காலை 9 மணி முதல் 3 மணி வரையில் இவ்வாறு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.