Date:

நிபா வைரஸ் தொடர்பான விசேட அறிவிப்பு

முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் இறக்குமதி மூலம் இலங்கைக்குள் நிபா வைரஸ் பரவும் அபாயம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணை குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நிபா வைரஸ் இலங்கைக்குள் பிரவேசிக்கும் அபாயம் மிகவும் குறைவு என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவும் அபாயம் கடந்த மூன்று வருடங்களில் பல தடவைகள் முன்னிலைப்படுத்தப்பட்ட போதிலும் அது இலங்கையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என அவர் கூறுகிறார்.

நிபா வைரஸ் குறித்து மக்கள் தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம் என்றும் அலுத்கே மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது

இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட...

2026 வரவு செலவு திட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை

நீர்ப்பாசனத் துறைகளின் ஊடாக பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை.பெறுவது தொடர்பில் 2026 வரவு...

மீண்டும் இலங்கையில் எலிக்காய்ச்சல்

இலங்கையில் எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்...

வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் 15 ஆம் திகதி ஹர்த்த்தால்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் எதிர்வரும் 15 ஆம் திகதி...