இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 300 ஓட்டங்களை பெற்றுள்ளது.
போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 300 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணி சார்பில் அவிஷ்க பெர்னாண்டோ 118 ஓட்டங்களையும் சரித் அசலன்க 72 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் தென் ஆபிரிக்க அணியின் கேஷவ் மகராஜ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதற்கமைய, தென் ஆபிரிக்க அணி 301 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட உள்ளது.