நீண்ட காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள 24 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கைதிகளை சிறந்த பிரஜைகளாக்கி மீண்டும் சமூகமயமாக்கும் திட்டத்தின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்ட 24 கைதிகளே விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இதற்கிணங்க, எதிர்வரும் 17 ஆம் திகதி 09 சிறைச்சாலைகளிலுள்ள குறித்த கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் அனுமதியின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.