Date:

கொவிட் தொற்றுநோயை தோற்கடிக்க புனித வெசாக் உற்சவத்தில் ஈடுபடும் பிரைம் குழுமம்

இலங்கையின் பாரிய வீட்டுவசதி மற்றும் காணி கட்டட விற்பனைத் குழுமமான பிரைம் வர்த்தக குழுமம், கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வெசாக் மாதத்தில் கொவிட் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரண்டு Non-invasive Ventilatorகளை நன்கொடையாக வழங்கியது. கொவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த இலங்கை வாழ் மக்களிடம் உதவியை அரசாங்கம் கோரியபோது, இந்த செயற்கை சுவாசக் கருவிகளை வழங்க பிரைம் குழுமம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது.

ஆன்மீக பூஜைகளுக்கு முன்னுரிமை அளித்து, வீட்டில் வெசாக் அலங்காரங்கள் மற்றும் விலை உயர்ந்த வெசாக் பந்தல்களை அமைத்து வெசாக் பண்டிகைகளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, இலங்கை வாழ் மக்கள் இந்த கொவிட் தொற்றுநோயிலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள், இது தானம், இரக்கம் மற்றும் தியாகத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் புத்தரின் பிரசங்கத்தின் உண்மையான மதிப்பை சேர்க்கிறது.

பிரைம் குழுமத்தால் வழங்கப்பட்ட இந்த செயற்கை சுவாசக் கருவிகள் கம்பாஹா மாவட்ட பொது மருத்துவமனையின் டாக்டர் சசங்க வெடிசிங்கவிடம் பிரைம் குழுமதத்தின் தலைவர் பிரேமலால் பிராக்மணகே தலைமையிலான குழுவினரால் வழங்கப்பட்டது, இதில் பிரைம் குழுமத்தினர் உறுப்பினர்கள் உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பிரைம் குழுமத்தால் நன்கொடையளிக்கப்பட்ட இந்த இரண்டு புதிய செயற்கை சுவாசக் கருவிகளுடன் தற்போது கம்பஹா பொது மருத்துவமனையில் செயற்கை சுவாசப் பிரிவிலுள்ள கருவிகள் 06ஆக அதிகரிக்கத்துள்ளது. கொவிட் தொற்றுநோயால் சுவாசக் கோளாறு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு கொண்டு வரப்படும் பல நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற உதவும்.

புத்தரின் போதனைகளில் குறிப்பிடப்பட்டுள்ள உதவி செய்வதையும் இரக்கத்தையும் அனைவருக்கும் பரப்புவதற்கும், அந்த உன்னத குணங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கும் வெசாக் பருவம் சிறந்த வாய்ப்பாக உள்ளது என்று நான் நம்புகிறேன். ஒரு நல்ல செயலின் முடிவு மற்றும் அதன் நன்மைகளும் சிறந்தது என பிரைம் குழுமத்திலுள்ள நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்பது உண்மை. மேலும் கொவிட்டின் இந்த புதிய மாறுபாட்டால் சுவாசக் கோளாறுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஒரு இலங்கையிலுள்ள ஒரு வர்த்தகக் குழுமமாக கொவிட் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற எங்களால் முடிந்த தாராளமான நன்கொடைகளை அளிக்க விரும்பினோம். என பிரைம் குழுமத்தின் தலைவர் பிரேமலால் பிராக்மனகே தெரிவித்தார்.

பிரைம் குழுமம்

இலங்கையின் காணி கட்டட விற்பனை துறையில் சர்வதேச கடன் தரமான ICRA [A-] நிதி நிலைத் தன்மையைப் பெற்ற ஒரேயொருரு குழுமமான பிரைம் குழுமம் காணி மற்றும் கட்டட மேம்பாட்டுத் துறையில் சுமார் 25 வருடகால அனுபவத்தைக் கொண்ட முழுமையான இலங்கை வர்த்தக குழுமமாகும். பிரைம் குழுமம் LMD சஞ்சிகையினால் 2019 ஆண்டில் நாட்டின் வர்த்தகங்கள் மத்தியில் கௌரவமான வர்த்தக நாமங்கள் அடங்கிய நிறுவனங்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டது. அத்துடன் பிரைம் குழுமத்தின் தலைவர் மற்றும் அதன் துணை தலைவி ஆகியோரை LMD சஞ்சிகையினால் 2019 ஆம் ஆண்டில் நாட்டின் சிறந்த 100 வர்த்தகங்களைச் சேர்ந்த ‘Realty Visionary’ and ‘Power Woman’இனால் மதிப்பீடு செய்யப்பட்டதுடன், பிரபலமான PropertyGuru Asia Property Awards விருது வழங்கும் நிகழ்வில் ‘Best Developer’ மற்றும் ‘Best Luxury Condo Development’ என்ற விருதுகளையும் வெல்வதற்கு பிரைம் குழுமத்திற்கு முடிந்தது.

Asia One சஞ்சிகையினால் கௌரவிக்கப்படும் ஆசியாவின் விசேட இலச்சினைகளுக்குள் இடம்பிடித்துள்ளதுடன் 2018 ஆம் ஆண்டு இலங்கைகயில் சிறந்த தொழில்முனைவோர் என்ற அந்தஸ்தையும் பிரைம் குழுமம் பெற்றது. அத்துடன் தனியார் நிறுவன குழுமமாக இருந்த பிரைம் குழுமத்தில் சேவை மற்றும் முதலீடுகளை விஸ்தரிக்கும் நோக்கில் Prime Lands Residencies பொதுப் பங்கு விநியோகம் (IPO) மேற்கொள்ளப்பட்டதுடன் சிறந்த ஒத்துழைப்புடன் முடிவடைந்த இந்த பங்கு விநியோகத்தின் மூலம் குழுமத்தின் பங்குரிமை தொடர்பில் முதலீட்டாளர்களில் பெரும்பாலானோருக்கு சந்தர்பம் வழங்கியதனால் சர்வதேச தரத்திற்கு கட்டட விற்பனை நிறுவனமாக உருவாகுவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய விசா நடைமுறை அறிமுகம்

ஈ - விசா பெற்றுக் கொள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் ...

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: மேலுமொருவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த...

ஷாபி வழக்கு இன்னும் நிறைவு பெறவில்லை – அத்துரலியே ரதன தேரர்

நாம் ஒருபோதும் இனவாதத்தினை தூண்டவில்லை என்பதோடு ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக...

சாதாரண தரப் பரீட்சை மே மாதம்- திருத்த பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர மீள் திருத்த பெறுபேறுகள் இவ்வருட சாதாரண தரப்...