Date:

இராஜின் கன்னத்தில் அறையவில்லை-யோஷித்த

பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன தேசிய இளைஞர் சேவைச் சபையின் பணிப்பாளர் குழுவிலிருந்து நேற்று (25) இராஜினாமா செய்தமைக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும், பிரதமரின் பணிக்குழாம் பிரதானியுமாகிய யோஷித்த ராஜபக்ஷ, இராஜின் கன்னத்திற்கு அறைந்தமையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.

இருப்பினும் இந்த செய்தியை யோஷித்த ராஜபக்ஷ முற்றாக நிராகரித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த யோஷித்த ராஜபக்ஷ, இராஜ் வீரரத்னவுடன் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லையெனவும், அவரை இறுதியாக உற்சவமொன்றில் வைத்து சந்தித்ததாகவும் தெரிவித்தார்.

எனவே, இராஜ் பதவியை இராஜினாமா செய்தமைக்கும் தனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லையென யோஷித்த தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking பால் மாவின் விலை சடுதியாக குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நாளை முதல் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள்...

கொழும்பில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

கொழும்பு 10 - டெக்னிகல் சந்திப்பு - ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில்...

ஈரான் ஜனாதிபதியின் வாக்குறுதி

  ஈரான் தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள...

Amazon Campus கல்வி நிறுவனத்துக்கு மேலும் இரண்டு UK அங்கீகாரம்

இலங்கையில் தரமான முறையில் பல பாடநெறிகளை வழங்குகின்ற UGC மற்றும் TVEC...