Date:

4 தடுப்பூசிகளின் செயற்திறன் தொடர்பான ஆய்வில் வெளிவந்த தகவல்கள்

கொவிட்-19 தடுப்பூசி நூற்றுக்கு நூறு வீதம் செயல்திறன் மிக்கதாக இல்லாவிட்டாலும்கூட, அதனூடாக நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதும், மரணமடைவதும் பெரும்பாலும் தடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கியமான நான்கு தடுப்பூசிகளின் செயற்திறன் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே, தமது ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

50 வயதிற்கு மேற்பட்டவர்களை அவதானிக்கையில், சைனோபாம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களை விடவும், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களிடையே ஏற்படும் மரணம், 8 மடங்கு அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரம், பைஸர், அஸ்ட்ராசெனகா மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட 50 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே இதுவரையில் மரணங்கள் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

50 வயதிற்கு குறைந்த, தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத கொவிட் தொற்றாளர்களின் மரணமானது, சைனோபாம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களை விடவும், 3.8 மடங்கு அதிகமாகும் என்றும் இந்த ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அதிரடியாக வெளியானது லியோ படத்தின் Badass பாடல்..

அதிரடியாக வெளியானது லியோ படத்தின் badass பாடல்.. இதோ https://youtu.be/IqwIOlhfCak

தனுஷ்க குணதிலக்கவிற்கு மீண்டும் வாய்ப்பு? விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள...

விடுதலையானதும் தனுஷ்க குணதிலக வெளியிட்டுள்ள தகவல்

கடந்த 11 மாதங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.  எனது வாழ்க்கை...

பல பகுதிகளில் மழை – 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய...