Date:

இராஜின் கன்னத்தில் அறையவில்லை-யோஷித்த

பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன தேசிய இளைஞர் சேவைச் சபையின் பணிப்பாளர் குழுவிலிருந்து நேற்று (25) இராஜினாமா செய்தமைக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும், பிரதமரின் பணிக்குழாம் பிரதானியுமாகிய யோஷித்த ராஜபக்ஷ, இராஜின் கன்னத்திற்கு அறைந்தமையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.

இருப்பினும் இந்த செய்தியை யோஷித்த ராஜபக்ஷ முற்றாக நிராகரித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த யோஷித்த ராஜபக்ஷ, இராஜ் வீரரத்னவுடன் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லையெனவும், அவரை இறுதியாக உற்சவமொன்றில் வைத்து சந்தித்ததாகவும் தெரிவித்தார்.

எனவே, இராஜ் பதவியை இராஜினாமா செய்தமைக்கும் தனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லையென யோஷித்த தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பில் போராட்டம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல்...

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன்,...

பாரம்பரியம் மிளிர அரங்கேறிய லயன்ஸ் மாவட்ட 306 D3-இன் “தைப்பொங்கல் விழா 2026”

லயன்ஸ் சர்வதேச மாவட்ட 306 D3 இன் ஏற்பாட்டில், தமிழர்களின் பாரம்பரிய...

மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200...