Date:

இராஜின் கன்னத்தில் அறையவில்லை-யோஷித்த

பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன தேசிய இளைஞர் சேவைச் சபையின் பணிப்பாளர் குழுவிலிருந்து நேற்று (25) இராஜினாமா செய்தமைக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும், பிரதமரின் பணிக்குழாம் பிரதானியுமாகிய யோஷித்த ராஜபக்ஷ, இராஜின் கன்னத்திற்கு அறைந்தமையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.

இருப்பினும் இந்த செய்தியை யோஷித்த ராஜபக்ஷ முற்றாக நிராகரித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த யோஷித்த ராஜபக்ஷ, இராஜ் வீரரத்னவுடன் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லையெனவும், அவரை இறுதியாக உற்சவமொன்றில் வைத்து சந்தித்ததாகவும் தெரிவித்தார்.

எனவே, இராஜ் பதவியை இராஜினாமா செய்தமைக்கும் தனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லையென யோஷித்த தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நுவரெலியாவிலிருந்து கொழும்பு சென்ற மரக்கறி மலை!

கொழும்பில் ஏற்பட்ட பெரும் தேவையைத் தொடர்ந்து, நேற்று நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து...

பயணத்தை இலகுவாக்கப் புதுப்பிக்கப்பட்ட Google Map!!

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google Map A மற்றும்...

16 ஆம் திகதி ஆரம்பிக்க முடியாத பாடசாலைகள்!

16 ஆம் திகதி ஆரம்பிக்க முடியாத பாடசாலைகளின் பட்டியல் இதோ.. ...

இலங்கை வந்த ரஷ்யா உதவி விமானம்!

நாட்டைப் பாதித்த சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கைப் பொதுமக்களுக்கு நிவாரணம்...