Date:

4 தடுப்பூசிகளின் செயற்திறன் தொடர்பான ஆய்வில் வெளிவந்த தகவல்கள்

கொவிட்-19 தடுப்பூசி நூற்றுக்கு நூறு வீதம் செயல்திறன் மிக்கதாக இல்லாவிட்டாலும்கூட, அதனூடாக நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதும், மரணமடைவதும் பெரும்பாலும் தடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கியமான நான்கு தடுப்பூசிகளின் செயற்திறன் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே, தமது ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

50 வயதிற்கு மேற்பட்டவர்களை அவதானிக்கையில், சைனோபாம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களை விடவும், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களிடையே ஏற்படும் மரணம், 8 மடங்கு அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரம், பைஸர், அஸ்ட்ராசெனகா மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட 50 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே இதுவரையில் மரணங்கள் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

50 வயதிற்கு குறைந்த, தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத கொவிட் தொற்றாளர்களின் மரணமானது, சைனோபாம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களை விடவும், 3.8 மடங்கு அதிகமாகும் என்றும் இந்த ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு...

இஸ்ரேலில் இலங்கையர் இறந்து விட்டதாக அறிவிப்பு

இஸ்ரேலில் இலங்கையர் ஒருவர் வியாழக்கிழமை (13) இரவு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கை...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது

அண்மையில் கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் ஆண்...

இலங்கைக்கு கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை

இலங்கைக்குக் கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...