Date:

இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும்

நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மின்னல் தாக்கம் மற்றும் தற்காலிகமாக அதிகரித்து வீசும் காற்று என்பனவற்றினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

எரிபொருளினைப் பெறுவதற்கு மீண்டும் நீண்ட வரிசை (Pics)

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை முதல் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட...

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்தவகையில், இன்றைய தினம்...

வேகமாக பரவும் அடினோ வைரஸ் என சந்தேகிக்கப்படும் மர்மமான வைரஸ்

சிறுவர்களிடையே தற்போது வேகமாக பரவக் கூடிய மர்மமான வைரஸ் ஒன்று அதிகமாக...

யாழ், கிழக்கு பல்கலைக்கழங்களின் சித்த மருத்துவ பிரிவுகளை, பீடங்களாக தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி

யாழ், கிழக்கு பல்கலைக்கழங்களின் சித்த மருத்துவ பிரிவுகளை தரமுயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த...