18 தொடக்கம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கிடையில் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் நடுப்பகுதியில் 30 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றல் செயற்பாடு நிறைவு செய்யப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.