ஒருநாள் மற்றும் 20 க்கு 20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக தென்னாபிரிக்க அணி, இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தது.
டோஹாவிலிருந்து, கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 668 என்ற விமானத்தின் மூலம், அதிகாலை 2.15 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள், விமான நிலையத்திற்கு சென்று தென்னாபிரிக்க அணியினரை வரவேற்றுள்ளனர்.
உயிர்க்குமிழி பாதுகாப்பு நடைமுறையில் அவர்கள் இலங்கையில் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் ஈடுபடவுள்ளனர்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது.