பௌத்தமயமாக்கல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இரத்து செய்யக்கோரி இன்று (25 ) வடக்கு கிழக்கில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று 25ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள பொது முடக்கம் ஊடான எதிர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ் மக்களும், சிவில் சமூக அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தமது முழுமையான ஆதரவை வழங்க முன்வர வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை முழுமையாக முடங்கியது யாழ்ப்பாண நகரின் புகைப்படங்கள் வௌியாகியுள்ளது.