இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடு தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைய நாணய மாற்று விகிதங்களில் மாற்றம் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாடுக்கு அமைய எதிர்காலத்தில் நாணமாற்று வீதம் தீர்மானிக்கப்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலைமைகளின் கீழ் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 315 முதல் 320 வரையில் நிலைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பிரியங்க துனுசிங்க குறிப்பிட்டுள்ளார்.