கிலியன் எம்பாப்வே பிரான்ஸின் தேசிய கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்டாரில் இறுதியாக இடம்பெற்ற உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவிடம் பிரான்ஸ் தோல்வியுற்றதையடுத்து, அவ்வணியின் தலைவர் ஹியூகோ லோறிஸ் சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கிலியன் எம்பாப்வேவை புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் கால்பந்தாட்டச் சம்மேளனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.