யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் வலைப் பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் செல்லவுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வியாஸ்காந்த் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பங்களாதேஷில் விளையாடியது எனக்கு நிறைய அனுபவங்களும் , சர்வதேச விளையாட்டு வீரர்களின் அறிமுகங்களும் கிடைத்தது.
தற்போது எனக்கு ஐபிஎல் இல் ராஜஸ்தான் அணிக்காக வலைப் பந்து வீச்சு வீரராக எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
என்னுடன் குமார் சங்கக்கார நேரடியாக கதைத்திருந்தார். எனது கிரிக்கெட்டை அடுத்து கட்டத்திற்கு எடுத்துச் செல்ல கவனிக்கிறேன் என்றார் என வியாஸ்காந் தெரிவித்துள்ளார்.