சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியை பெறுவதற்கு ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷத சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை அவருடைய உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கின் ஊடாக தெரிவித்துள்ளார்.
1/2: Relieved @IMFLive has approved #SriLanka EFF facility. The commitment of Pres @RW_UNP to get the job done is appreciated notwithstanding our political differences. Professionalism of Gov @cbsl and ST in the process must be commended. If the previous lot did this in 2020 … pic.twitter.com/UZAkAqtmyc
— Harsha de Silva (@HarshadeSilvaMP) March 20, 2023
இது தொடர்பில் இவ்வாறு பதிவிட்டுள்ளார், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதியைப் பெறுவதில் அரசாங்கம் மற்றும் மத்திய வங்கியின் நிபுணத்துவம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று
மேலும், 2020ஆம் ஆண்டு சர்வதேச நிதியம் சர்வதேச நிதியத்திற்கு சென்றிருந்தால் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் குறைந்திருக்கலாம், அன்றைய அரசு ஆணவத்தால் நாடு இறுதியில் வங்குரோத்து நிலையை அடைந்ததுகடன் மறுசீரமைப்பு ஒரு கடினமான பணி மற்றும் சீர்திருத்தம் ஒரு பெரிய பணி, என்றுள்ளார்.