Date:

யாழ். வைத்தியசாலையில் இடமில்லை அதிரடி அறிவிப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களை பராமரிக்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன எனத் தெரிவித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா, தொடர்ந்து அடுத்து ஒரு புதிய விடுதியை தயார்படுத்தி கொரோனா தொற்றாளர்களை அனுமதிக்க வேண்டிய  தேவை காணப்படுகின்றது என்றும் கூறினார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்,  இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தொற்றாளர்களின்  எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வர்ருவதாகவும் கூறினார்.

எனவே இந்த நோயின் தாக்கத்தில்  இருந்து விடுபடுவதற்கு முக்கியமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவதுமுக்கியமாகும் என்று கூறிய அவர், “அத்தோடு, தடுப்பூசியினை கட்டாயமாக நீங்கள் பெற்றுக் கொள்வது சிறந்ததாக இருக்கும். அதேநேரத்தில் எமது வைத்தியசாலையில் இறந்தவர்களின் தரவை  பார்க்கும்போது அனைவரும் தடுப்பூசி பெறாதவர்களே ஆவர். எனவே தடுப்பூசி பெறுவதன் மூலம்  இறப்புகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும்” என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கிழக்கு மாகாண வைத்தியர்கள் அதிரடி வேலை நிறுத்தம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் (GMOA) இன்று (13) கிழக்கு மாகாணத்திலுள்ள...

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தனது பதவி காலத்தை நிறைவு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபென்ன இடமாறல்களுக்கு இடையில் இன்று...

சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் பாதுகாப்பு விவகார பத்தி...