Date:

பிரபல சிங்களப் பாடகர் நிஹால் நெல்சன் காலமானார்

பிரபல சிங்களப் பாடகர் நிஹால் நெல்சன் காலமானார்.

மரணிக்கும் போது அவருக்கு 76 வயதாகும்.

இன்று (13) காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் தனது வீட்டிலேயே காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவையில் வர்த்தகராக இருந்த ஜி.டி. ஹென்ட்ரிக் மற்றும் ஆங்கில ஆசிரியரான ஹேமா வீரவர்தன ஆகியோரின் ஒரே மகனாக நிஹால் நெல்சன் 1946 ஜனவரி 09 இல் பிறந்தார்.

பாடசாலை பருவத்தில் சங்கீதம் பயின்ற அவர், 1962ஆம் ஆண்டில் தான் எழுதி பாடிய பாடலொன்றை திருமண நிகழ்வொன்றில் பாடி முதன் முதலாக இசைப் பயணத்தை ஆரம்பித்தார்.

பைலா பாடல்களை பாடி புகழ்பெற்ற நிஹால் நெல்சன், 113 இசை அல்பங்களை கெசட் (Cassette) மற்றும் குறுந்தட்டு (CD) மூலம் வெளியிட்டுள்ளார். அத்துடன் இலங்கையில் முதன் முதலில் குறுந்தட்டு (CD) மூலம் பாடல் வெளியிட்ட பெருமையையும் இவர் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஏப்ரல் 15 அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பது குறித்து...

தேசபந்து நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு...

படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று!

படலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (10) இடம்பெறவுள்ளது.   ஏப்ரல்...

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி…

மத்திய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373